தனிச்சொத்து
-
நெடுங்காலமாக நிலவிவரும் கருத்துகளின்படி, மனித சமுதாயங்கள் அதன் தொடக்கத்தில் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வந்த சமத்துவம் கொண்ட குழுக்களாக ஒருங்கிணைந்து இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தன. கால்நடை வளர்ப்பும் வேளாண்மையின் மேம்பாடும்- அதன் விளைவான செல்வச் சேர்க்கையும்- சிக்கலானதும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டதுமான சமுதாயங்கள் உருவாவதற்கு இட்டுச் சென்றன. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஒப்பீட்டுத் தொல்லியல் துறைப் பேராசிரியரான டேவிட் வென்க்ரோவ், மனித சமுதாயங்களின் இயல்பான பரிணாமம் குறித்த இந்தக் கருத்தை மறுக்கிறார். மானுடவியலாளர் டேவிட் க்ராபேருடன் இணைந்து…